
சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி,திருவண்ணாமலை,திருச்சி,தூத்துகுடி,கடலூர்,விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தஞ்சை, சென்னை போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.
இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர், ஆயர் (கோனார்) சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் இடையர்,கோன்,கோனார்,யாதவர்,கரையாளர்,பிள்ளை,யாதவ்,மந்திரி என்றழைக்கபடுக்கிறார்கள்.
ஆயர்கள் பண்டைய தமிழ் சமுகம் பகுத்த ஐந்திணைகளில் முல்லை திணையை சேர்ந்தவர்கள்.முல்லை திணை என்பது காடும் காடு சார்ந்த பகுதியும் ஆகும்.பண்டைய தமிழ் நூல்கள் இவர்களை ஆயர்கள் என்றும் இடையர்கள் என்றும் குறிப்பிடுகிறது.
பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் பயன்படுத்தியவரை இவர்கள் கோன்,கோனார் என்றே பயன்படுத்ததிவந்துள்ளனர்.நகர் பகுதியில் வாழும் ஆயர்கள் 'பிள்ளை' என்ற பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர் இடையர் இன மக்கள் மட்டுமே கோனார் என்ற பட்டத்தை பயன் படுத்துவார்கள் மற்ற சமுகத்தினர் யாரும் இந்த பட்டத்தை பயன் படுத்தியதில்லை,எனினும் மற்ற பெயர்களான பிள்ளை உள்ளிட்ட பெயர்கள் மற்ற சமுகத்தினறும் பயன்படுத்துகிறார்கள்.தற்போது யாதவ் என்ற பெயர் பரவலாக பயன்படுத்தபடுகிறது
இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.யாதவர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப் பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர். அவர்கள் சனிக் கிழமையைப் புனித நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள் நடக்கும் உறியடி உதசவத்தின்போதுகிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளாகிய வெண்ணெய் திருடுதல், வெண்ணெய் மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில் வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக் கூறப்படுகிறது.முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள். தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர் இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில் ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும் வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு. இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய சத்துக்களை வழங்குகிறார்கள்.
யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன் மணமகளை மணக்க முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அது வழக்கொழிந்து போய்விட்டது.முன்பு வயதுக்கு வந்த பெண்கள் பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சீக்கிரமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக் கட்டுப்பாடு வேகமாக மறைந்து வருகிறது.சிலர் அக்காள் மகளைத் திருமணம் செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும் யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை மட்டுமே மணக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும், மணமகளின் வெட்கத்தை மாற்றும் பொருட்டும் திருமணத்தின்போது சில கேலி விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த பானையில் ஒரு தங்க மோதிரத்தைப் போட்டு, அதை மணமக்களை எடுக்கச் சொல்கிறார்கள். மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா, பெண்குழந்தை வேண்டுமா’ என்று கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே வழக்கொழிந்து போய்விட்டன.
நண்பரே யாதவர் என்ற சொல் நமக்கு பொருத்தமற்ற சொல்.நாம் தமிழர்கள்.நமக்கு வரலாறு உள்ளது.நமக்கு இலக்கிய ஆவணங்கள் உள்ளன.அவற்றில் எந்த இடத்திலாவது யாதவன் என்ற சொல்உள்ளதா?இல்லை.அவ்வாறிருக்க நாம் ஏன் யாதவன் எனக்கூற வேண்டும். நாம் இடையர்கள் ஆயர்கள் கோனார் என நமது தனித்துவத்தை இழக்க வேண்டாம்.நமது அடையாளத்தை மீட்க வேண்டும்.யாதவர் என்ற சொல் நமது இனச்சான்றுகளில் இருந்து நீக்கப்படவேண்டும்.இடையர் என்ற சாதி அடையாளமாக இருப்போம்.இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
ReplyDeleteArumai
Deleteஉண்மை யாதவர் இல்லை ஆயர் அல்லது இடையர் இது தான் நமது வழக்கம்
Deleteமுற்றிலும் உண்மை
Deleteஇந்த சமுதாயம் இங்குமட்டுமல்ல இந்தியா முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மிகப்பெரிய சமுதாயம் இதற்கு தேசிய அடையாளமாக ஒரே பெயர் யாதவ்....
Deleteஏன் உலகம் முழுவதும் ஆடு மேய்ப்பவர்கள் இருக்கின்றனர் ..அவர்களையும் சேர்த்து கொள்
Deleteசரியான விளக்கம்.இடைத்தரகர்கள் நமது ஆயர்குலத்தின் சிறப்பை சிதைக்கின்றனர்.ஆயர்குலம் தான் மனிதன் நாகரீகம் அடைந்த தொன்மை வரலாறு.ஆயர் என்ற சொல்தான் தென் தமிழகத்தின் பழம் குடி சொல்.யாதவர் என்ற சொல் 'யா' என்ற சொல்லின் திரிபு.தெற்கிலிருந்து கோன்,ஆயர் இவர்கள் வடபுலம் மாடுகளுடன் பெற்றவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம்.'அகீர்' என்ற குலம் வடக்கே வீரத்துடன் வளர்த்தனர்.இவர்களை வடநாட்டில் உள்ளவர்கள் தெற்கிலிருந்து வந்த காரணத்தால் யா என்ற சொல்லாடலில் புத்தகத்தில் யாதவர் என திரித்து எழுதி விட்டு மேலும் தெற்கே பூர்வ குடியாய் வாழ்ந்த ஆயர்குலத்தை யாதவர் என திருத்துதல் போன்ற தவறான முறையில் நம்மை மடைமாத்துகிறார்கள்.மிகக் கவனம் தேவை.இனி இளைஞர்கள் நம்மை ஆயர்,கோன் என அழைக்கவும்.அப்போதுதான் நாம் பூர்வீக குடும்பமான ஆயர்குலம் என தெரியும்.
Deleteகிருஷ்ணர் யாதவர் குலத்தில் பிறந்து யாதவ குலத்திலேயே வளர்ந்தவர்..திருத்தம் தேவை..
ReplyDeleteநம் தலைவர் பகவன்ஸ்ரீகிருஷ்ணர் வடமாநிலத்தில் பிறக்கவிலை நம்தென்தமிழகத்தில் ஆயர்குலத்திள் பிறந்தவர் யூத பிராமணர்கள் கி.பி.இரணாடாம் நூற்றாண்டு வாக்கிள் தமிழகம் வந்த யூதபிராமணர்கள் நம்தமிழிளிள் இருந்த மகாபாரததை எடுத்து சமஸ்கிருதத்திள் வடமாநிலத்தில் பிறந்தவராக காட்டியள்ளார்கள்
Deleteநம் தலைவர் பகவன்ஸ்ரீகிருஷ்ணர் வடமாநிலத்தில் பிறக்கவிலை நம்தென்தமிழகத்தில் ஆயர்குலத்திள் பிறந்தவர் யூத பிராமணர்கள் கி.பி.இரணாடாம் நூற்றாண்டு வாக்கிள் தமிழகம் வந்த யூதபிராமணர்கள் நம்தமிழிளிள் இருந்த மகாபாரததை எடுத்து சமஸ்கிருதத்திள் வடமாநிலத்தில் பிறந்தவராக காட்டியள்ளார்கள்
Deleteகிருஷ்ணர் என்ற வடசொல் அதன் தமிழ் பெயர்.கருத்திணன்.
Deleteவடநாட்டில் பாண்டிய குலம் இரண்டாம் போரின்(ஆதி மகாபாரதத்தின் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் மலை மக்களுக்கும் நிலையங்களுக்கும் நடந்த)பிறகு நடந்தது பாண்டிய குலதண்டு குலம் என வட இந்திய ஆரியர் அழைத்தனர்.
சரியான ஆய்வு
Deleteகிருஷ் என்ற வட சொல் மருவி கிருஷ்ணர் என ஆனது.'யா' என்றால் தெற்கு.தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு மேற்கு திசைகள் அனைத்திலும் முல்லை நில மக்கள் பரவி வாழ்ந்தனர்.குறிப்பாக கைபர் போலோ கணவாய் வழியாக வந்த செங்கிஸ்கான் இனமக்கள் நமது அகிர் என்ற ஆயர்குலத்தை பலம் இழக்க வைத்து பாரத தேசத்துக்கு அனுப்பினர்.செங்கிஸ்தான் இனக்குழுவும் அரபு இனக்குழுவும் சேர்ந்து வலிமையுடன் அகிர் இனத்தை பாரத தேசத்தை நோக்கி நகர்த்தி விட்டு வலுவிழந்த அகிர் இனத்தை ஆட்சி செய்து வந்தனர்.அவர்கள் ஆயர்களை தெற்கிலிருந்து வந்தவர்கள் என முத்திரை குத்த " யா " என்ற சொல் ஆடல் பிற்காலத்தில் யா + அவர்= யா + தவர்.இதுவே யாதவர் என்று ஆயர்கள் அழைக்கப்பட்டனர்.
Deleteஇனி வரும் சந்ததியினர் நாம் யார் என புரிதல் வேண்டும்.ஆயர்குலம் மீண்டும் வளரவேண்டும்.
https://youtu.be/BiSNKNZGp_I
ReplyDeletehttps://youtu.be/BiSNKNZGp_I
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஓம் சக்தி உங்கள் கூற்று உண்மை.தொடர்புக்கு 9010975893
ReplyDelete